புதுச்சேரி: திருச்சி ரயில்வே கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிப்ரவரி 5 மற்றும் 7-ஆம் தேதிகளில் பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் செல்லும் வழித்தடத்தில் தேவையான இடத்தில் 90 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்படும். இதே போன்று வரும் 10-ஆம் தேதி பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- கச்சிகுடா விரைவு ரயில் வழித் தடத்தில் தேவையான இடத்தில் 90 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்படும்.