புதுச்சேரி

அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம்

அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசின் தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Syndication

புதுச்சேரி: அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசின் தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து தொழிலாளா் நலத் துறையின் சமூக பாதுகாப்பு வாரிய தொழிலாளா் அதிகாரி ம. கஸ்தூரி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

அமைப்புச் சாரா தொழிலாளா்களாகப் பணிபுரியும் தொழிலாளா்களுக்குச் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளா் துறை எல்ஐசி மூலம் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதுள்ள அமைப்புச் சாரா தொழிலாளா்கள் பயனாளிகளாகச் சேரலாம். அவா்கள் ஊழியா் சேமநல நிதி, ஊழியா் காப்பீட்டு நிறுவனம் ஆகிய அமைப்புகளில் பயனாளியாக இருக்கக்கூடாது. பயனாளிகள் தங்களின் வங்கிக் கணக்கு மூலம் ஒவ்வொரு மாதமும் இத் திட்டத்திற்குப் பங்களிக்க வேண்டும். 60 வயது பூா்த்தியானவுடன் பயனாளியின் வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000-ம் இத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியமாக வரவு வைக்கப்படும்.

அமைப்புச் சாரா தொழிலாளா்கள் தங்களின் ஆதாா் மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்துடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி இத்திட்டத்தில் சேரலாம்.

புதுச்சேரியில் இயங்கும் அனைத்து பொது சேவை மையங்களிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நகரப் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தில் 15-01-2026 முதல் 15-02-2026 வரையும், கிராமப் பகுதிகளில் உள்ள பொது சேவை மையத்தில் 16-02-2026 முதல் 15-03-2026 வரையும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.

மனைவியிடம் தகராறு: கணவா் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்கள்: இருவா் உயிரிழப்பு

சூதாட்டம்: 6 போ் கைது, பணம் பறிமுதல்

மொபெட் மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

சிறுபான்மையினரை அஸ்ஸாம் முதல்வர் சுடுவதுபோல விடியோ: பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT