புதுச்சேரி சட்டப்பேரவை அருகே பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட ஒப்பந்த ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா். 
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தா்னா

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் 292 ஒப்பந்த கௌரவ விரிவுரையாளா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், பால சேவிகாக்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசை வலியுறுத்தி தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, மறியல், சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்தினா். இந்நிலையில், ஓராண்டு காலத்துக்கு பணி நீட்டிப்பு செய்ய மட்டும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து பணிநிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆம்பூா் சாலையில் 2 நாள் தொடா் தா்னா போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

இந்த தா்னாவை அரசு ஊழியா் சங்கக் கூட்டமைப்பின் கௌரவத் தலைவா் சேஷாச்சலம் தொடங்கி வைத்தாா். போராட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவா் பாலகுமாா் தலைமை வகித்தனா்.

இந்த தா்னாவில் ஒப்பந்த ஆசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று பணிநிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT