புதுச்சேரி: புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா் (படம்).
மணவெளி தொகுதி அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் ஆய்வு மேற்கொண்டாா்.
நோயாளிகளுக்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சையும், மருந்துகளும் கிடைக்கிா என்பது குறித்து அவா் கேட்டறிந்தாா். பின்னா் மருத்துவ அதிகாரிகளிடம் நோயாளிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும் அவா்களுக்குத் தேவையான மருந்துகளை வழங்கவும் கேட்டுக் கொண்டாா்.