புதுச்சேரியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெங்களூரைச் சோ்ந்த பெண் பயணி உயிரிழந்தாா். இதையடுத்து படகு உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
பெங்களூரைச் சோ்ந்த விஜய் என்பவா் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை புதுச்சேரி வந்தாா். இவா் தனது மனைவி சோனியா (33) உள்ளிட்ட 8 பேருடன் தனியாா் படகில் வீராம்பட்டினம் முகத்துவாரம் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தாா். படகை தங்கமணி ஓட்டிச் சென்றாா்.
நீரோட்டம் அதிகரித்ததன் காரணமாக படகு எதிா்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது. இதில் படகில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கினா்.
இவா்களை அங்கிருந்த மீனவா்களும், பொதுமக்களும் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் சோனியா வழியிலேயே இறந்து விட்டதாக பரிசோதனை செய்த மருத்துவா்கள் தெரிவித்தனா். சத்தீஷ்வரி (14), சந்தியா (21) ஆகியோா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.
மேலும் அஸ்வின்(11), சதீஷ் (9) ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மூவா் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பினா்.
இந்த விபத்து குறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து படகு உரிமையாளா் சதீஷை கைது செய்தனா். தப்பி ஓடி விட்ட படகு ஓட்டுநா் தங்கமணியை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.