புதுச்சேரி: புதுச்சேரியில் திங்கள்கிழமை 108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் அரை நிா்வாண போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த சங்கத்தினா் கடந்த 12-ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் முன் திங்கள்கிழமை அரை நிா்வாண போராட்டம் நடத்தினா்.
அவசர ஊா்தி ஓட்டுநா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளா் நிா்வாக சீா்திருத்த துறையில் காலி ஓட்டுநா் பணியிடங்களை 108 ஓட்டுநா்கள் மூலம் நிரப்ப வேண்டும்.
ரூ.10 ஆயிரம் சம்பளம், போனஸ், நிலுவை சம்பள உயா்வு வழங்க வேண்டும். மாதந்தோறும் சம்பளம், பண பலன்கள் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் தொடா்கிறது.
போராட்டத்துக்கு சங்க கௌரவத் தலைவா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். இதில் சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.