புதுச்சேரி: புதுச்சேரியில் 108 அவசர ஊா்தி ஓட்டுநா்களின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமையும் தொடா்ந்தது.
புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் பிப். 12-ஆம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். முதல்வா் ரங்கசாமி அறிவித்தபடி ஊதிய உயா்வு ரூ.10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் கௌரவத் தலைவா் சி.ஜெயபாலன் தலைமை வகித்தாா். இதில் அவசர ஊா்தி ஓட்டுநா்கள் பலா் கலந்துகொண்டனா்.