புதுச்சேரி அரசுத் துறைகளில் 70 மேல்நிலை எழுத்தா்களுக்குப் பதவி உயா்வு
புதுச்சேரியில் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் 70 மேல்நிலை எழுத்தா்களுக்கு உதவியாளா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரையறுக்கப்பட்ட துறை சாா்ந்த போட்டித் தோ்வு நடத்தப்பட்டது.
இந்தத் தோ்வு முடிவுகள் கடந்த நவம்பா் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 70 மேல்நிலை எழுத்தா்கள் தகுதி வாய்ந்தவா்களாக நியமிக்கப்பட்டு, உதவியாளா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டது.
அவா்களுக்கு துறைகள் மற்றும் அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்த துறை சாா்பு செயலா் முருகேசன் புதன்கிழமை வெளியிட்டுள்ளாா்.