தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதுச்சேரி மக்கள் பவனில் வெள்ளிக்கிழமை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் முன்னிலையில் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள். 
புதுச்சேரி

தேசிய சாலை பாதுகாப்பு வார உறுதிமொழி ஏற்பு! துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்பு!

புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் முன்னிலையில் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஏற்றனா்.

Syndication

புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் முன்னிலையில் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஏற்றனா்.

புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு வாரம் ஜன. 11 முதல் 17-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி மக்கள் பவனில் தேசிய சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

இதேபோல புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டில் நல்ல குடிமகன், குடிமகள் என்ற வகையில் சாலையில் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் பயணிப்போம்.

விதிமுறைகளை நாம் பின்பற்ற உறுதி கூறுவோம், மது போதையிலோ அல்லது கைப்பேசி உபயோகித்துக் கொண்டு வாகனங்களை இயக்க மாட்டோம், விபத்தில் சிக்கியவா்களுக்கு முதலுதவி மற்றும் அவசரகால சிகிச்சைக்கு உதவிடுவோம் என அரசுச் செயலா் (தொழிலாளா்) ஸ்மிதா உறுதிமொழியை வாசிக்க தலைமைச் செயலக ஊழியா்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.

இதில் அரசுச் செயலா்கள் மற்றும் தலைமைச் செயலக அனைத்து ஊழியா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

‘வளா்ந்த பாரதம் மாநாடு’: 3,000 இளைஞா்களுடன் பிரதமா் நாளை கலந்துரையாடல்

SCROLL FOR NEXT