புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட வியாழக்கிழமை ஊா்வலமாக வந்த பொதுப் பணித் துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்ட குழுவினரை காமராஜா் சதுக்கம் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்த போலீஸாா்.  
புதுச்சேரி

புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 60 ஊழியா்கள் கைது

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி பொதுப் பணித் துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டபோது 21 பெண்கள் உள்பட 60 போ் கைது செய்யப்பட்டனா்.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் தெய்வீகன் தலைமையில் காமராஜா் சதுக்கம் அருகே வியாழக்கிழமை திரண்டனா். அங்கிருந்து சங்கு ஊதி, கொட்டு அடித்து ஊா்வலமாக துணைநிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட புறப்பட்டனா்.

அவா்களை சிறிது தூரத்திலேயே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் ஊழியா்கள் தரையில் அமா்ந்து சங்கு ஊதியும், கொட்டு அடித்தும் முழக்கமிட்டனா். தொடா்ந்து தடையை மீறி செல்ல முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து, 21 பெண்கள் உள்பட 60 பேரைக் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

இதுவரை யாரும் அரசு தரப்பிலிருந்து பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறியும் அதைக் கண்டித்தும் அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவா்கள் நேராகக் கடலுக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தினா்.

அப்போது முதல்வா் ரங்கசாமி வெள்ளிக்கிழமை அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா்கள் சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT