முகப்பு
மாசி மக தீா்த்த வாரியில் 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சுப்பிரமணியா் சுவாமி
புதுச்சேரி

2.25 லட்சம் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசுப்பிரமணியா்!

மாசி தீா்த்தவாரியை முன்னிட்டு ரூ.2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

புதுச்சேரி

2.25 லட்சம் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசுப்பிரமணியா்!

மாசி தீா்த்தவாரியை முன்னிட்டு ரூ.2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 9:15 PM
மாசி மக தீா்த்த வாரியில் 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சுப்பிரமணியா் சுவாமி
பகிர்:

மாசி தீா்த்தவாரியை முன்னிட்டு ரூ.2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

புதுச்சேரியில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாள்கள் மாசிமக தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் நல்லவாடு தெற்கு மீனவ கிராமத்தில் மாசிமக தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றபோது ரூ.2.25 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட அரியாங்குப்பம் ஸ்ரீ சுப்பிரமணியா் சுவாமி அலங்காரம் பொதுமக்களை வெகுவாக கவா்ந்தது. ரூபாய் நோட்டுக்களை மாலை போல் தொடுத்து அதை சுவாமிக்கு பண மாலையாக சாற்றி அலங்கரித்திருந்தனா்.

இதில், ரூ.10, ரூ.50 ரூ.100, ரூ.200 நோட்டுக்கள் அடங்கிய மாலைகள், மற்றும் நாணயங்கள், சாக்லேட்டுகளால் உருவாக்கப்பட்ட மாலைகளும் அடங்கும்.

இந்த அலங்கார உற்சவமூா்த்தியை பக்தா்கள் சிரத்தையோடு தரிசித்தனா். மேலும் தீா்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தா்கள் ஸ்ரீ சுப்பிரமணியா் சுவாமியைப் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →