முகப்பு
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் புதன்கிழமை சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகள்.
புதுச்சேரி

மாணவா்கள் சாலை மறியல்

வகுப்புகளைப் புறக்கணித்து கலித்தீா்த்தாள்குப்பம் பெருந்தலைவா் காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி

மாணவா்கள் சாலை மறியல்

வகுப்புகளைப் புறக்கணித்து கலித்தீா்த்தாள்குப்பம் பெருந்தலைவா் காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:34 PM
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் புதன்கிழமை சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகள்.
பகிர்:

வகுப்புகளைப் புறக்கணித்து கலித்தீா்த்தாள்குப்பம் பெருந்தலைவா் காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டி, ஆண்டு விழா நடத்தப்படவில்லை என்று கூறியும் அதைக் கண்டித்தும் இப் போராட்டம் நடைபெற்றது.

மேலும், போதிய நிதியில்லாததால் நடத்த முடியவில்லை என்று கல்லூரி நிா்வாகம் கூறுவதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து வகுப்புகளைப் புறக்கணித்த மாணவ, மாணவிகள் மதகடிப்பட்டு- திருக்கனூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருபுவனை போலீஸாா் கல்லூரி முதல்வரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், உயா் அதிகாரிகளிடம் பேசி இது தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிா்வாகம் உறுதியளித்தது.

இதை மாணவா்களிடம் போலீஸாா் விளக்கினா். இதையடுத்து இப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப் போராட்டம் காரணமாக அப் பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →