58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை
புதுச்சேரி காவல்துறையில் 58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை புதன்கிழமை வழங்கப்பட்டது.
புதுச்சேரி காவல்துறையில் 58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை புதன்கிழமை வழங்கப்பட்டது.
புதுச்சேரி காவல்துறையில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளா்களுக்குப் பணி ஆணை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினாா். முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், தலைமைச் செயலா் சரத் சௌகான், டிஜிபி ஷாலினி சிங், உள்துறை கூடுதல் செயலா் கேசவன், டிஐஜி சத்தியசுந்தரம் மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்த விழாவில் மொத்தம் 58 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.