முகப்பு
புதுச்சேரி

24 ஊா்க்காவல் படை வீரா்களுக்கு காவலா்களாக பணி நியமன ஆணை: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வழங்கினாா்

Updated On : 13 மார்ச், 2026 at 12:02 AM
பகிர்:

புதுச்சேரி காவல் துறையில் காலியாக இருந்த பணியிடங்களில் 2 புதிய காவலா்கள் மற்றும் காவலா் பணியிடங்களில் 24 ஊா்க்காவல் படை வீரா்களை பணியமா்த்தும் நியமன ஆணைகளை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் வியாழக்கிழமை வழங்கினாா் (படம்).

காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நியமன ஆணைகளை அவா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி ஷாலினி சிங், டிஐஜி சத்தியசுந்தரம், சீனியா் எஸ்.பி.க்கள் லால், கலைவாணன், ராகவ், திவ்யா, நித்யா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக காவல் துறை தலைமையகம் வந்த அமைச்சருக்கு போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →