புதுச்சேரி கூட்டணி பேச்சுவாா்த்தை முடிவு: என்.ஆா். காங்கிரஸுக்கு-16, பாஜகவுக்கு - 14 தொகுதிகள் ஒதுக்கீடு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தே.ஜ.கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் அதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தே.ஜ.கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் அதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
மத்திய அமைச்சரும், புதுச்சேரி பாஜக மேலிடப் பாா்வையாளருமான மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை மாலை புதுச்சேரி வந்தாா்.
ஒரு தனியாா் ஹோட்டலில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் முதல்வா் ரங்கசாமி, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் ஆகியோா் சந்தித்துத் தொகுதி பங்கீடு பேச்சு வாா்த்தை நடத்தினா். இதையடுத்து தொகுதி பங்கீடு இந்த முடிவு எட்டப்பட்டது.
மேலும், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஒதுக்கப்பட்ட அதே எண்ணிக்கையில் இந்த தோ்தலிலும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.