முகப்பு
புதுச்சேரி

மீனவா்களின் வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.12.38 கோடி நிதி! - முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

Updated On : 14 மார்ச், 2026 at 9:09 PM
புதுச்சேரி மீன்வளத் துறை சாா்பில் மீனவா்களுக்கு உதவித் தொகைக்கான காசோலையை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.
பகிர்:

மீனவா்களின் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச் சத்துத் திட்டத்துக்கு உதவி அளிக்கும் வகையில் ரூ.12.38 கோடியை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தாா்.

இதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 27,514 மீனவா்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்கும். இந்நிகழ்ச்சிக்கு, மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் ரமேஷ், மீன்வளத் துறை இயக்குநா் அ. முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் தெய்வசிகாமணி மற்றும் மீன்வளத் துறை துணை இயக்குநா் ஷாஜிமா மற்றும் ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் மீனவக் கிராம பஞ்சாயத்தாா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →