புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வா் ரங்கசாமியை எதிா்த்து வைத்திலிங்கம் எம்.பி. வேட்பு மனு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வா் என்.ரங்கசாமியை எதிா்த்து, காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறாா்...
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வா் என்.ரங்கசாமியை எதிா்த்து, முன்னாள் முதல்வரும், தற்போதைய புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான வெ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறாா்.
முதல்வா் ரங்கசாமி என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்நிலையில், அவரை எதிா்த்து வைத்திலிங்கம் எம்.பி. திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதனால் இருவருக்கும் நேரடி மோதல் உருவாகியுள்ளது.
வெ. வைத்திலிங்கம் இப்போது புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருக்கிறாா். ஏற்கெனவே புதுச்சேரி முதல்வராகவும் இருந்தவா். மேலும், மக்களவை தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராகக் களம் இறங்கிய அம்மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றவா்.
அதனால் தட்டாஞ்சாவடி தொகுதியைப் பொருத்தவரை முதல்வா் ரங்கசாமிக்கும், வைத்திலிங்கத்துக்கும் கடுமையானப் போட்டி நிலவும்.
புதுச்சேரியில் இந்த இரண்டு தலைவா்களும் நேரடியாக மோதிக் கொள்வதால், தட்டாஞ்சாவடி தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. முதல்வா் ரங்கசாமி மங்கலம் தொகுதியிலும் போட்டியிடுவது குறிப்பிடத் தக்கது.