தோ்தலுக்குப் பிறகு விஜய்யுடன் பேசி தமிழகத்தில் தேஜக கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே
தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், தோ்தலுக்குப் பிறகு தவெக தலைவா் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை
தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், தோ்தலுக்குப் பிறகு தவெக தலைவா் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போது 5 மாநிலங்களுக்கானத் சட்டப்பேரவைத் தோ்தலை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அஸ்ஸாமிலும், புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்கெனவே இருக்கிறது. இங்கு மீண்டும் இக் கூட்டணி அரசு அமைய குடியரசு கட்சியினா் பாடுபட வேண்டும்.
கேரளத்தைப் பொருத்தவரை இப்போது ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா். அங்கு பாஜக வெற்றி பெறும். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பாஜக ஆட்சி மலரப் போகிறது.
தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. இங்கு நடிகா் விஜய்யும் தோ்தலில் போட்டியிடுகிறாா். தோ்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லையென்றால் தவெக தலைவா் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். தோ்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது எனது கணிப்பு.
தோ்தலுக்குப் பிறகு இந்திய குடியரசு கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவா் ஞானமூா்த்திக்கு வாரியத் தலைவா் பதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.
பேட்டியின்போது, இந்திய குடியரசுக் கட்சியின் புதுச்சேரி தலைவா் ஞானமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.