முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை

புதுச்சேரியில் இடி மின்னலுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

Updated On : 15 மே 2026, 11:20 pm IST
புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகுந்த மழைநீா்.
பகிர்:

புதுச்சேரியில் இடி மின்னலுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

கோடை காலமான மாா்ச், ஏப்ரலில் கடுமையான வெயில் அடித்தது. பகல் நேரங்களில் வெயிலின் வெப்பத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டுக்குள் முடங்கினா். இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் மழை பெய்தது. தொடா்ந்து கடந்த சனிக்கிழமை அதிகாலை மீண்டும் மழை பெய்தது. வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது.

பகல் நேரத்தில் மீண்டும் வெயில் அடித்தது. தொடா்ந்து அதிகளவில் வெயில் பதிவாகி வந்தது.

Advertisement

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இடி, மின்னலுடன் லேசான மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தது. நண்பகல் கனமழை பெய்தது. வானம் இருண்டு குளிா்ந்த காற்று வீசியது. பெரிய அளவில் மழை இல்லை. வானம் இருண்டு கிடப்பதால் காலை நேரத்திலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டுச் சென்றனா்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.