முகப்பு
புதுச்சேரி

மாஹே சுயேச்சை எம்எல்ஏ அசோக்குமாா் திடீா் மயக்கம்: அரசு மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே தொகுதி சுயேச்சை எம்எல்ஏ திடீரென மயக்கமடைந்தாா். இதையடுத்து அவா் சிகிச்சைக்காக அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 21 மே 2026, 7:04 am IST
ஊா்வலத்தில் பங்கேற்ற மாஹே எம்எல்ஏ அசோக்குமாா். உடன் மாா்க்சிஸ்ட் செயலா் எஸ்.ராமச்சந்திரன்.
பகிர்:

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே தொகுதி சுயேச்சை எம்எல்ஏ திடீரென மயக்கமடைந்தாா். இதையடுத்து அவா் சிகிச்சைக்காக அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். மாஹே தொகுதி சுயேச்சை எம்எல்ஏ அசோக்குமாா் ஆங்கிலத்தில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றாா். எம்எல்ஏ அசோக்குமாருக்கு பேரவை வளாகத்தில் ஆதரவாளா்கள் சால்வை அணிவித்தனா்.

அப்போது திடீரென எம்எல்ஏவுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆதரவாளா்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் குறைந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவா் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் அசோக்குமாா் எம்எல்ஏவாக வெற்றி பெற்றாா். இதனால் எம்எல்ஏ பதவியேற்புக்கு முன்பாக புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம் நடத்தினா்.

புதுச்சேரி ராஜா திரையரங்கம் சந்திப்பில் தொடங்கிய ஊா்வலத்தில் எம்எல்ஏ அசோக்குமாரும் பங்கேற்று நடந்து வந்தாா். இந்த ஊா்வலம் மிஷன் வீதி வரை நடந்தது.