ஜிப்மரில் புன்னகை பயிற்சி முகாம்
புதுச்சேரி ஜிப்மரில் புன்னகை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி ஜிப்மரில் புன்னகை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜிப்மா் செவிலியா் துறை மற்றும் குழந்தைகள் மருத்துவம்-பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறை இணைந்து இந்த முகாமை நடத்தின.
மருத்துவக் கண்காணிப்பாளா் (பொ) மருத்துவா் கௌரி துரைராஜன் தொடங்கிவைத்தாா். செவிலியா் சேவை இயக்குநா் மற்றும் தர மேலாளா்-புன்னகை ஒருங்கிணைப்பாளா் செங்கமலா்ச் செல்வி வரவேற்றாா்.
Advertisement
Advertisement
செவிலியா் சேவைகள் பொறுப்பாளா் புஷ்பலதா தொடக்க உரையாற்றினாா்.
பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியா் உஷாதேவி மற்றும் குழந்தைகள் மருத்துவத் துறை பேராசிரியா் நிவேதிதா மொண்டல் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மூத்த சுகாதார தர மேலாண்மை நிபுணா் ராகேஷ் கண்ணா, குழந்தை நட்பு மருத்துவ சேவைகள் மற்றும் பயனுள்ள தகவல் பரிமாற்றம் குறித்து உரையாற்றினா். தடயவியல் மற்றும் நச்சியியல் துறை பேராசிரியா் அம்பிகா பத்ரா, போக்ஸோ சட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக பராமரிப்பு குறித்து விளக்கமளித்தாா்.
தகவல் நிறைந்த அமா்வுகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்துவதோடு, மனிதநேயமும் தரநிலையும் கொண்ட செவிலியா் சேவையை ஊக்குவிக்கும் என பங்கேற்பாளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
ஜிப்மா் செவிலியா் கண்காணிப்பாளா் ஜேன் மேரி ஆண்ட்ரூ நன்றி கூறினாா்.