விழுப்புரம்

காவலரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை

தினமணி

உளுந்தூர்பேட்டை பட்டாலியன் குடியிருப்புப் பகுதியில் காவலரின் மனைவி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 உளுந்தூர்பேட்டை அருகே பாலியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியன் மையம் உள்ளது. இங்கு காவலராக பணிபுரிபவர் ரவீந்திரன். இவரது மனைவி அபிராமி(25). இருஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 5 மாத குழந்தை உள்ளது. ரவீந்திரன் குடும்பத்துடன் பட்டாலியனில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
 இந்த நிலையில், புதன்கிழமை பகல் 12 மணி அளவில் வீட்டில் இருந்த ரவீந்திரன், குழந்தைக்கு பால் கொடுக்கவில்லை என்று மனைவியை திட்டினாராம். பின்னர், குழந்தையை தூக்கிக்கொண்டு, வெளியே சென்றுவிட்டு, பிற்பகல் 2 மணி அளவில் வீட்டுக்குத் திரும்பினாராம். அப்போது, வீட்டில் அபிராமி தூக்கில் தொங்கி
 தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில் எடைக்கல் போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT