விழுப்புரம்

பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் சாவு

தினமணி

செஞ்சி அருகே, ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் பேருந்திலிருந்து இருந்து தவறி விழுந்த பெண் புதன்கிழமை இறந்தார்.
 செஞ்சி வட்டம், பென்னகர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை. சென்னையில் வெல்டிங் வேலை செய்து அங்கேயே குடும்பம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பாஞ்சாலி (45). இவர், புதன்கிழமை பென்னகர் கிராமத்துக்குச் செல்ல, சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்தார்.
 செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வந்தபோது, பாஞ்சாலி இறங்குவதற்கு தயாராக எழுந்து நின்று கொண்டிருந்தார். நீதி மன்றம் எதிரே அமைக்கப்பட்ட தாற்காலிக தடுப்பு கட்டையை கடக்கும்போது, பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டார்.
 இதில், பாஞ்சாலி பின்பக்க வாயில் வழியாக தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு அதே இடத்தில் இறந்தார்.
 இந்த விபத்து குறித்து செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT