விழுப்புரம்

வக்ஃப் வாரியத் தேர்தல் பார்வையாளர்: விண்ணப்பிக்க அழைப்பு

DIN

வக்ஃபு வாரியத் தேர்தல் நடத்தும் குழு பார்வையாளர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுத் தேர்தல்கள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதில்அனுபவம் வாய்ந்த வருவாய், கூட்டுறவு, நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற முஸ்லிம் நபர்களிடமிருந்து பள்ளிவாசல்கள் மற்றும் இதர வக்ஃபுகளுக்கு முத்தவல்லிகள், நிர்வாகக்குழு தேர்வு செய்வதற்கு தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிட, மாவட்ட அளவிலான தேர்தல் பார்வையாளர்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு தேர்தலுக்கும் தகுந்த மதிப்புறு தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் முழு சுயகுறிப்புடன் முதன்மைச் செயல் அலுவலர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், எண்.1, ஜாஃபர் சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை - 600001 என்ற முகவரிக்கு வரும் மே 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT