முகப்பு
விழுப்புரம்

ஆதரவற்றோருக்கு தீபாவளி இனிப்பு: எஸ்.பி. வழங்கினார்

விழுப்புரம் அருகே பானாம்பட்டை அடுத்த சுந்தரிப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்,

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

விழுப்புரம் அருகே பானாம்பட்டை அடுத்த சுந்தரிப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர், குழந்தைகளுக்கு தீபாவளியையொட்டி இனிப்புகளை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார்.
 கிருபாலயா எனும் தனியார் ஆதரவற்றோர் இல்லத்துக்கு புதன்கிழமை காலை நேரில் சென்ற அவர், அங்குள்ள 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்புகள், பட்டாசுகளை வழங்கி தீபாவளி வாழத்துகளைத் தெரிவித்தார்.
 இந்த நிகழ்ச்சியில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி, ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →