விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 9 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அதன்படி, விழுப்புரம் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் கல்பனா விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும், ரூபி தேவசகாயராணி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், ஜோதிலட்சுமி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், மரியசோமி மஞ்சுளா விழுப்புரம் நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல, காவல் ஆய்வாளர் வளர்மதி மரக்காணம் காவல் நிலையத்துக்கும், மாலை உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், ரேவதி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர். மேலும், ஏழுமலை கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்துக்கும், விழுப்புரம் நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் கடலூர், ரெட்டிச்சாவடி காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.