முகப்பு
விழுப்புரம்

செஞ்சி வடக்கு பார்த்த அம்மன் கோயில் தேரோட்டம்

செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள வடக்கு பார்த்த அம்மன் (எ) ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள வடக்கு பார்த்த அம்மன் (எ) ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் பிரமோற்சவ விழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 21-ஆம் தேதி அம்மனுக்கு கூழ் வார்த்தலும், தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா  நடைபெற்றது. 
சனிக்கிழமை தீ மிதி திருவிழாவை முன்னிட்டு காலை  அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீ மிதித்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ரேணுகாம்பாள், ஸ்ரீமாரியம்மன், பரசுராமர் ஆகிய தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர், தேர் சக்கரத்துக்கு பூஜைகள் நடைபெற்று மஹா தீபாராதனைக்குப் பிறகு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
தேரை செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவரும், செஞ்சி நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான வி.ரங்கநாதன் வடம்பிடித்து இழுத்துத் தொடக்கி வைத்தார். இரவு ஊஞ்சல் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்ச விழா நிறைவு பெற்றது. 
விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வி.பி.என்.சரவணன் தலைமையிலான சிறுகடம்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →