ஆட்டோ மோதியதில் முதியவர் சாவு
கள்ளக்குறிச்சியில் ஆட்டோ மோதியதில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
கள்ளக்குறிச்சியில் ஆட்டோ மோதியதில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி வஉசி நகரில் வசிப்பவர் சொக்கலிங்கம் (66), கூலித் தொழிலாளி. இவர், கடந்த 3-ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே சாலையோரம் நடந்து சென்றபோது ஆட்டோ மோதியதில் காயமடைந்தார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சனிக்கிழமை உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சாம்பசிவம் மகன் லட்சுமணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.