பழைய வெடிகளை கொளுத்திய சிறுவர்கள் மூவர் காயம்
திருக்கோவிலூர் அருகே பழைய வெடிகளில் இருந்து மருந்தை எடுத்துக் கொளுத்திய பள்ளிச் சிறுவர்கள் 3 பேர் தீக்காயமடைந்தனர்.
திருக்கோவிலூர் அருகே பழைய வெடிகளில் இருந்து மருந்தை எடுத்துக் கொளுத்திய பள்ளிச் சிறுவர்கள் 3 பேர் தீக்காயமடைந்தனர்.
திருக்கோவிலூர் அருகே மழவந்தாங்கலில் உள்ள முருகன் கோயிலில் கடந்த 29-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பயன்படுத்தப்பட்ட வெடிகளில் சில, வெடிக்காதவையாக கிடந்தன.
அந்த வெடிகளை அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான ராஜீவ்காந்தி மகன் பிரமோத் (9),முருகன் மகன் காந்திச்செல்வன்(8), ரமேஷ் மகன் ராகுல்(8) ஆகியோர் சனிக்கிழமை இரவு தேடி எடுத்து, அதிலிருந்த வெடி மருந்தை மொத்தமாகக் கொட்டி கொளுத்தினர். அப்போது, திடீரென வெளிப்பட்ட அதிகப்படியான தீயில் பிரமோத், காந்திச்செல்வன், ராகுல் ஆகியோர் சிக்கி காயமடைந்தனர். உடனே, அவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக, சென்னை, கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து கண்டாச்சிபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.