மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பு
உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம சேவை பிரிவான விவேகானந்த சேவா பிரதிஷ்டான் சார்பில் மாணவர்களின் கல்விக்கான சிறப்பு யாகம் , ஊக்க தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் விழா
உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம சேவை பிரிவான விவேகானந்த சேவா பிரதிஷ்டான் சார்பில் மாணவர்களின் கல்விக்கான சிறப்பு யாகம் , ஊக்க தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் விழா உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு இரா.குமரகுரு எம்எல்ஏ தலைமை வகித்து, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பரிசுகள் வழங்கினார் (படம்). பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சௌ.இராமலிங்கம் சிறப்புரையாற்றினார். ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் யதீஸ்வரி ஆத்ம விகாஸப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.