முகப்பு
விழுப்புரம்

பறிமுதல் வாகனங்கள் ரூ.32 லட்சத்துக்கு ஏலம்

விழுப்புரத்தில் நடைபெற்ற மது விலக்கு பறிமுதல் வாகன ஏலத்தில் 110 வாகனங்கள் ரூ.32 லட்சத்துக்கு ஏலம் போனது. 

Updated On : 29 மார்ச், 2018 at 8:49 AM
பகிர்:

விழுப்புரத்தில் நடைபெற்ற மது விலக்கு பறிமுதல் வாகன ஏலத்தில் 110 வாகனங்கள் ரூ.32 லட்சத்துக்கு ஏலம் போனது.
 விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 172 மோட்டார் வாகனங்கள் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
 ஏலத்தின் முடிவில் 34 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 74 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 110 மோட்டார் வாகனங்கள் ரூ.32 லட்சத்து 74 ஆயிரத்து 300-க்கும் ஏலம்போனது.
 நிகழ்ச்சியில் மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி. ராஜராஜன், மதுவிலக்கு டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.