முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.விழுப்புரம், அறிஞர்

Updated On : 15 மே, 2018 at 4:28 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
விழுப்புரம், அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு இளங்கலை, இளம் அறிவியல், இளம் வணிகவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
கல்லூரி முதல்வர் காவேரியம்மாள் மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி தொடக்கி வைத்தார்.
விண்ணப்ப விநியோகம் வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் காவேரியம்மாள் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு வெளியாக உள்ள நிலையில், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
அரசு மகளிர் கல்லூரி: விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் நகராட்சி, காமராஜர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில், பி.ஏ. ஆங்கிலம், தமிழ், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், பி.காம். ஆகிய பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரும் மே 31-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர்(பொ) ரவிசங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.