விழுப்புரம்

நூலக ஆர்வலர் விருது அறிவிப்பு

DIN

திருக்கோவிலூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியனுக்கு (படம்) தமிழக அரசின் நூலக ஆர்வலர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
நூலக இயக்ககம் வளர முனைப்புடன் சிறப்பாக பங்காற்றி வரும் வாசகர் வட்டத் தலைவர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அளவில் ஒருவருக்கு நூலக ஆர்வலர் விருது வழங்கப்பட்டு வந்தது. நிகழாண்டு மாவட்ட அளவில் சிறந்த வாசகர் வட்டத் தலைவர் ஒருவருக்கு நூலக ஆர்வலர் விருது வழங்கப்படும் என மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. 
அதன்படி, விழுப்புரம் மாவட்ட அளவில், திருக்கோவிலூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியனுக்கு, இநத விருது வழங்குவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னையில் வரும் 14-ஆம் தேதி நடைபெறும் நூலக வார விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.  
இதையடுத்து இவருக்கு, மாவட்ட நூலக அலுவலர்(பொ) இரா.சுப்பிரமணியன், கிளை நூலக நூலகர் மு.அன்பழகன் மற்றும் நூலகப்  புரவலர்கள், வாசகர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT