கள்ளக்குறிச்சி நீலமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தின் தேசிய ஒளிபரப்பு வருகிற சனிக்கிழமை (நவ.17) முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரசார் பாரதி வாரியத்தின் முடிவின்படி, விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் பகுதியில் இயங்கி வரும் அலை எண்-5 கொண்ட தூர்தர்ஷன் குறைந்த சக்தி (எல்.பி.டி) தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தின் தரைவழி தேசிய ஒளிபரப்பு வருகிற 17-ஆம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக தூர்தர்ஷன் இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.