விழுப்புரம்

நேரு பிறந்த நாள் விழா

DIN

அரகண்டநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில், ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவரும், அரகண்டநல்லூர் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமை வகித்து, நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கே.வி.முருகன், மாவட்ட பொதுச் செயலர்கள் தாயுமானவர், விளந்தை அ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ஹெச்.சாதுல்லாகான் வரவேற்றார். வட்டாரத் தலைவர் எம்.ஆர்.சேட்டு, வட்ட துணைத் தலைவர் மகாலிங்கம், கொல்லூர் விஜயகுமார், வசந்தகிருஷ்ணாபுரம் வெள்ளையங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT