திண்டிவனம் அரசு மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.
திண்டிவனம் அரசு மருத்துவமனை அருகே சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த சில நாள்களாக தங்கி இருந்தார். அவர் செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் ரோசணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.