முகப்பு
விழுப்புரம்

மின்னல் பாய்ந்து மூதாட்டி சாவு

சங்கராபுரம் அருகே மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:58 AM
பகிர்:

சங்கராபுரம் அருகே மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
சங்கராபுரத்தை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி மனைவி நீலாவதி(65). இவர், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். மாலை 4.10 மணியளவில் அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. அப்போது, எதிர்பாராமல் மின்னல் பாய்ந்ததில் இவர், நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். சடலத்தை சங்கராபுரம் காவல்துறையினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.