முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் கலைச்செழியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோ.குசேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியில் 1985-86-ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்கள் கலந்துகொண்டு, கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.