முகப்பு
விழுப்புரம்

விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணை பயிற்சி

திருக்கோவிலூர் அருகே முடியனுôர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணையம் அமைப்பது குறித்து பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:51 AM
பகிர்:

திருக்கோவிலூர் அருகே முடியனுôர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணையம் அமைப்பது குறித்து பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.
 திருக்கோவிலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தலைமை வகித்து, கூட்டுப் பண்ணையம் அமைக்கும் முறைகள், அதனை செயல்படுத்தும் விதங்கள் குறித்துப் பேசினார்.
 வேளாண் அலுவலர் ராஜா, உதவி வேளாண் அலுவலர் குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி ஆகியோர் வேளாண் இயந்திரங்கள் வாங்கும் முறை, உழவன் செயலி செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
 விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் அதிகளவில் கலந்துகொண்டனர். வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவி நன்றி கூறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.