விழுப்புரம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தினமணி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
 பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் தமிழகம் மட்டுமல்லாது, புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்பது வழக்கம்.
 அதேபோல, ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
 காலையில், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மலர் அலங்காரம், நடைபெற்று தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர், இரவு 11.30 மணியளவில் மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக அங்காளம்மன் மயில் வாகனத்தில் எழுந்தருளி ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டுப் பாடலை பாடினர்.
 தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
 விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ், கோயில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் கணேசன், அறங்காவலர்கள் கோயில் மேலாளர் மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில், செஞ்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT