விழுப்புரம்

பாரதியார் நினைவு தினம் கடைப்பிடிப்பு

DIN

விழுப்புரம் பவ்டா தொண்டு நிறுவனத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
விழுப்புரம் பவ்டா தொண்டு நிறுவனத்தில் பவ்டா கலை, அறிவியல் கல்லூரி, பவ்டா  வானொலி சார்பில், மகாகவி பாரதியாரின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. எழுத்தாளர் நாஞ்சில் கி.ராஜேந்திரன் வரவேற்றார்.
 பவ்டா தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் செ.ஜாஸ்லின் தம்பி, பாரதியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார். 
தொடர்ந்து, பவ்டா தொண்டு நிறுவன முதுநிலை பொது மேலாளர்கள்  வெங்கடாஜலபதி, பாரி, ஆல்வின்சகாயம், கோவிந்தராஜ், அரிசந்திரன், ராஜதுரை, ஆனந்தவேலன், சாந்தி, வளர்மதி, அசோகன் மற்றும் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT