விழுப்புரம்

விழுப்புரத்தில் தொழிலாளி அடித்துக் கொலை

DIN

விழுப்புரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் இனியவன் (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (43). இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
விழுப்புரத்தில் சுமை தூக்கும் தொழிலாளிகளாக உள்ள இவர்களுக்கு இடையே மது போதையில் சந்தைத் தெருவில் ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது, இனியவன் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜெயப்பிரகாஷ், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், இனியவன் மீது விழுப்புரம் மேற்கு போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT