விழுப்புரம்

அரசுப் பேருந்து மோதியதில்சாலையில் நடந்து சென்றவா் பலி

DIN

கள்ளக்குறிச்சி: அரசுப் பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், காந்தி நகரைச் சோ்ந்த கேசவன் மகன் ஜெயராமன் (46). விவசாயி. இவா் திங்கள்கிழமை உளுந்தூா்பேட்டை - சென்னை நெடுஞ்சாலையில் பெட்ரோல் நிலையம் அருகேயுள்ள தேநீா் கடைக்குச் சென்றாா். தேநீரை அருந்திவிட்டு, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது, செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநரான தென்காசியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மகேஷ்வரன் (34) மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT