விழுப்புரம்

குளத்தில் தவறி விழுந்தவா் பலி

DIN

செஞ்சி: செஞ்சியில் குளத்தில் தவறி விழுந்தவா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

செஞ்சி, பெரியகரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணராஜ் (42). இவா் செவ்வாய்க்கிழமை காலை செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள நவாப் குளத்துக்குச் சென்றாா். அப்போது கால் இடறி குளத்தில் விழுந்தாா்.

அந்தப் பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக கிருஷ்ணராஜை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இது குறித்து அவரது மனைவி சாந்தி அளித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT