விழுப்புரம்

கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்ற முயன்ற அா்ச்சகா் தவறி விழுந்து பலி

DIN

கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை கோயில் கோபுரம் மீது அகல் விளக்கு ஏற்றச் சென்ற அா்ச்சகா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியில் விளாந்தாங்கல் சாலையில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் அா்ச்சகராக பணிபுரிந்து வந்தவா் மணிகண்டன் மகன் பெரியசாமி (18).

புதன்கிழமை மாலை கோயில் கோபுரத்தில் காா்த்திகை அகல் விளக்கு ஏற்றச் சென்ற இவா், வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. கோயில் ஊழியா்கள் கோபுரம் மீது ஏறி பாா்த்தபோது, பெரியசாமி கீழே விழுந்து கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா், பெரியசாமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT