விழுப்புரம்

அமமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

தியாகதுருகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்  மக்களவை தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்துக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலர் கோமுகி.மணியன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர்கள் தங்கதுரை, மதுசூதன், ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் நகர செயலர் நம்பி வரவேற்றார். 
 சிறப்பு அழைப்பாளராக மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலரும், கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான அ.பிரபு பங்கேற்று பேசுகையில், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் உள்ளிட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.  பிப்.
24-இல் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவைக் கொண்டாட வேண்டும் என்றார்   கூட்டத்தில் மாவட்ட மாணவரணி செயலர் க.சீனுவாசன், பேரவை செயலர் சி.பால்ராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவி 
க.தனலட்சுமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலர் பா.மூர்த்தி, மாவட்ட  வர்த்தக அணிச் செயலர் சரவணன் 
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT