விழுப்புரம்

பயணிகள் நிழல்குடை திறப்பு

DIN

மயிலம் தொகுதி பேரணி ஊராட்சியில் புதிதாக பேருந்து  பயணிகள் நிழல்குடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பேரணியில்  மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த பயணிகள் நிழல் குடையை அத்தொகுதி எம்எல்ஏ இரா.மாசிலாமணி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்மந்தம் முன்னிலை வகித்தார். திமுக மாநில விவசாய அணி சார்பில் ரகுபதி வரவேற்றார்.

மாவட்ட துணைச் செயலர்கள் வசந்தா, மலர்மன்னன், பொருளாளர் ரவி, மயிலம் ஒன்றியச் செயலர்கள் சேதுநாதன், மணிமாறன், மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி ஜெயராமன், நிர்வாகிகள் கொடியம் குமார், செல்வகுமார், பாலசுந்தரம், சாரங்கபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT