சாலை விபத்தில் 2 ஊராட்சி எழுத்தர்கள் சாவு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஊராட்சி எழுத்தர்கள் இருவர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஊராட்சி எழுத்தர்கள் இருவர் உயிரிழந்தனர்.
செஞ்சி வட்டம், சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்த பீமன் மகன் தமிழ்நம்பி (22). ஊராட்சி எழுத்தர். இவர் ஞாயிற்றுக்கிழமை மேல்புதுப்பட்டு ஊராட்சி எழுத்தரான க.சந்திரலேகாவுடன் (25) மோட்டார் சைக்கிளில் வளத்தி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அண்ணமங்கலம் கூட்டுச்சாலை அருகே வந்த போது, சாத்தனந்தலில் இருந்து செஞ்சிக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தமிழ்நம்பி, சந்திரலேகா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயமடைந்த தமிழ்நம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்திரலேகாவை மீட்ட போலீஸார், செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து வளத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.