விழுப்புரம்

கிணற்றை தூர்வாரியபோது மண் சரிந்ததில் தொழிலாளி பலி

DIN

செஞ்சி அருகே கிணற்றை தூர்வாரியபோது  மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
மேல்மலையனூர் வட்டம், சிந்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் ஐயப்பன் (39). இவர், செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் புதன்
கிழமை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, கிணற்றின் ஒரு பகுதி கரை இடிந்து விழுந்ததில் ஐயப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
எனினும், அங்கு ஐயப்பன் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், அவலூர்பேட்டை போலீஸார் கிணற்றின் உரிமையாளரான சுப்பிரமணி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT