விழுப்புரம்

நிலங்களை மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

DIN

விக்கிரவாண்டி அருகே அபகரிக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தரக் கோரி முதியவர் ஒருவர், எஸ்.பி. அலுவலத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார்.
 விக்கிரவாண்டியை அடுத்த செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்(60) என்பவர் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: எனது தாத்தா, தந்தை ஆகியோருக்குச் சொந்தமாக செம்மேடு, வெள்ளேரிப்பட்டு ஆகிய கிராமங்களில் சுமார் 5 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலங்கள் அனைத்தும், வாரிசான எனக்கு சொந்தமானதாகும். ஆனால், இந்த நிலங்களை, வேறு சிலர் அபகரித்துள்ளனர். ஆகவே, அந்த நிலங்களை மீட்டுத் தர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT